அண்மையில் மார்ச் 31, 2023 முடிவடைந்த 2022-23 நிதி ஆண்டில் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களானது ரத்துசெய்யப்பட்டுள்ளது. விதிகளை கடைப்பிடிக்காத வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியானது 100 முறைக்கு மேல் அபராதம் விதித்து உள்ளது. கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கிராமப்புறங்களில் வங்கிசேவை வேகமாக விரிவடைந்து உள்ளது. இந்த வங்கிகளில் நேர்ந்த முறைகேடுகள் வெளி வருவதால், ரிசர்வ் வங்கியானது கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

8 வங்கிகளின் உரிமம் ரத்து

# லட்சுமி கூட்டுறவு வங்கி

# மிலாத் கூட்டுறவு வங்கி

# ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி

# ரூபாய் கூட்டுறவு வங்கி

# டெக்கான் நகர்ப்புற கூட்டுறவு வங்கி

# முதோல் கூட்டுறவு வங்கி

# சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி

# பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி

போதுமான மூலதனம், வங்கி ஒழுங்கு முறை விதிகளுக்கு இணங்காததால் மேற்கண்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியானது உரிமத்தினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.