இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வந்தே சிட்டிங் ரயில், வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர்கள் ஆகியவைதான் அந்த மூன்று வித ரயில்கள். வந்தே மெட்ரோ 100 கி.மீ வேகத்திலும், வந்தே சிட்டிங் ரயில் 100-500 கி.மீ, வந்தே ஸ்லீப்பர் ரயில் 550 கி.மீ வேகத்திலும் பயணிக்கும் என்று தெரியவந்துள்ளது.