கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த எட்டாம் வகுப்பு சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மூளையில் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதுவே அவரின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

சிறுமி இயற்கைக்கு மாறான உடலுறவு ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாக அவரின் உடலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சிறுமி மார்ச் 30ஆம் தேதி குளியலறையில் தலையில் காயம் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி உயிரிழந்து கிடந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.