ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீட்டில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து 13-ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு இந்தியரும் உணர்வுபூர்வமான தொடர்பை மூவர்ண கொடியுடன் கொண்டிருப்பதாகவும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் கடுமையான உழைப்பு உத்வேகம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.