இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகள் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குறைந்த அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் 200 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு 410.5 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை 2023 ஆகஸ்ட் 29 இல் 1118.5 ஆக அதிகரித்தது. ஒன்பது ஆண்டுகளில் மொத்தமாக 708 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 200 ரூபாய் மட்டுமே சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டர் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.