உண்மையான அன்பிற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் ஆலயத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. வயதான முதியவர் ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரைத் தனது முதுகில் சுமந்தபடி கோயில் படிக்கட்டுகளில் ஏறி ஜெகநாதரைத் தரிசிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த ஜெகநாதர் மீது அவர் கொண்ட பக்தியும், தன் மனைவியின் மீது அவர் வைத்துள்ள தீராத அன்பும் அங்கிருந்த பக்தர்களைக் கண் கலங்கச் செய்துள்ளது. இந்த மனதை உருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “உண்மையான காதல் என்றால் இதுதான்” என்று பலரும் இந்த முதியவரைப் பாராட்டி வருகின்றனர்.
అసలైన ప్రేమ అంటే ఇదే❤️
పూరీ జగన్నాథుని సన్నిధిలో ఓ అద్భుత దృశ్యం భక్తులను కదిలించింది. అనారోగ్యంతో ఉన్న తన భార్య కోరిక తీర్చేందుకు ఓ వృద్ధుడు ఆమెను భుజాలపై మోస్తూ ఆలయానికి తీసుకెళ్లారు. ఆ జగన్నాథుడిపై ఉన్న భక్తి, ఇల్లాలిపై ఉన్న అనురాగం ఆయనతో ఈ సాహసం చేయించాయి. pic.twitter.com/hqqaEVLkYg
— ChotaNews App (@ChotaNewsApp) February 11, 2026
வசதிகள் இல்லாவிட்டாலும், தன் மனைவியின் முகத்தில் ஒரு சிறு புன்னகையைப் பார்க்க அந்த முதியவர் எடுத்த இந்த முயற்சி, இன்றைய கால இளைஞர்களுக்குப் பெரிய பாடமாக அமைந்துள்ளது. மனைவியின் கடைசி கால ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் அந்த அன்பின் நிழலில், அங்கிருந்த கடவுளே அந்த தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அந்த காட்சி அமைந்திருந்தது.
