விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த முத்து, வெங்கடேஷ், சதீஷ்குமார், ராஜேஷ்குமார், சேகர், ராமசாமி, சுப்பிரமணியன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பத்தாயிரம் ரூபாய் பணம், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.