மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 7 மாத குழந்தை ஒன்று தெரு நாய்களால் கொடூரமாக கடித்துக் குதறி கொல்லப்பட்டது. குணா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் போபாலில் உள்ள அயோத்தி நகருக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தாய் தனது 7 மாதம் மகனுடன் தரையில் படுத்து இருந்த நிலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தெருநாய்கள் சிறுவனை தூக்கிச் சென்று கடித்துக் கொண்டுள்ளன.

இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவியதால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகம் ரூ.50,000 வழங்கியுள்ளது. மேலும் 50,000 விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.