இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்பிஐ வங்கி அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 6,160 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 15000 மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு நடைபெறும். இந்த வேலை குறித்து கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.