தளபதி விஜய் நடிகராக மட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி மக்களுக்காக பணம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் நேற்று சென்னை நீலாங்கரையில் மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மாணவி ஒருவர் தான் 12 ஆம் வகுப்பில் 600க்கு 597 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும் அப்படி பார்த்தால் நான் தான் மூன்றாவது இடம். ஆனால் தன்னை விஜய் ஏன் அழைக்கவில்லை என்றும் விழா நடந்த இடத்தின் வாசலில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கண்ணீருடன் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடன் வாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனிஆயடுத்து ஒரு சில தவறுகளால் இது நேர்ந்திருக்கலாம் எனவே இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் பனையூர் அலுவலகத்தில் விஜய்யை நேரில் சந்தித்து அவரிடம் நேரில் கூறுங்கள், உங்களுக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று ஆறுதல் கூறி விஜய் மக்கள் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர்