வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்து இருப்பதால் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். இனி 6 மணிக்கு மேல் டோக்கன் வைத்திருப்பவருக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.