மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்தா பகுதியில் வசித்து வரும் அனிதா என்ற பெண்ணுக்கும் அஜய் என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் பணம் மற்றும் நகைகளுடன் அனிதா தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்த நிலையில் இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் அனிதாவுக்கு இது ஆறாவது திருமணம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஏழாவது திருமணம் நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனிதாவை கைது செய்தனர். பிறகு நடத்திய விசாரணையில் கடந்த காலங்களில் இதே போல அவர் பலரை ஏமாற்றியது தெரிய வந்தது. தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.