தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தொழில்முறை மற்றும் 50 மீட்டர்களுக்குள் இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் 500 கடைகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகளும் தொடங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.