பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி வேன் ஓட்டுநர் ஐந்து வயது ஆன இரண்டு பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் பெற்றோர் அவர்களது சீருடையில் ரத்தம் படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் அங்கிருந்து வேகமாக சென்ற பள்ளி வேன் ஓட்டுனரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது வேன் ஓட்டுனரான சிக்கந்தர் ராய் இரண்டு குழந்தைகளையும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

மேலும் அதனை காணொளியாக தனது மொபைலில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அதே பள்ளியில் கடந்த மூன்று வருடமாக இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.