தனக்கு ஆதரவாக கையெழுத்திட எனக்கு ஐந்து கோடி கொடுத்து பேரம் பேச ஓபிஎஸ் முயன்றார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் இதை இபிஎஸ் இடம் சொன்னபோது அவர் எனக்கு ஆதரவாக செயல்பட்டார். அதன் பிறகு எனக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது என தமிழ் மகன் உசேன் கூறியுள்ள நிலையில் இந்த செய்தி அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.