2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேச தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அறியாமையால் பேசுகிறார் என்று சொல்லக்கூடாது. ஆனால் அறிவிலித்தனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும். அந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள நான் தயார். அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார்.