தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இவர் நேற்று குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் குழந்தையின் அருகே வந்த எலி ஒன்று குழந்தையின் மூக்கை கடித்துள்ளது. இதனால் கதறி அழுத குழந்தையின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் தாய் வந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கிலிருந்து அதிக அளவு ரத்தம் வந்துள்ளது.

இதையடு்த்து குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.