உத்தபிரதேச மாநிலம் நொயிடா பகுதியை சேர்ந்த சிக்கு என்ற சிறுவன் தனது தந்தையிடம் மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தன்னிடம் இருக்கும் 700 ரூபாயை வைத்து மகேந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்க முடியும் என்று தந்தையிடம் சிறுவன் கேட்க அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி வைரலான நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நண்பர் சிக்குவின் காணொளியை எனக்கு அனுப்பினார் அவரது வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பார்த்ததும் எனக்கு சிக்குவை பிடித்து விட்டது.

ஆனால் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் 700 ரூபாய்க்கு சிக்கு கூறியது போல் தார் காரை விற்பனை செய்தால் விரைவில் நாங்கள் திவால் ஆகி விடுவோம் என பதிவிட்டுள்ளார்.