
தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தென்காசி மாவட்டம் மேலப்பாவுரை சேர்ந்த கோமதி சங்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் சேர்ந்து ரசாயன பவுடர் கலந்த பாலை விற்று வந்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள், டீக்கடைகளில் பால் விற்பனை செய்துவந்துள்ளனர். அந்த ரசாயன பால் பவுடரை அந்த தம்பதியினருக்கு முப்புடாதி என்ற நபர் சப்ளை செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.