
நாமக்கல் மாவட்டம் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியில் இருந்து பிற்பகல் நேரம் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றபோது பள்ளிக்கு உள்ளே ஒரு ஆண் இருப்பது தெரியவந்தது.
அன்றைய தினமே இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமி அழுதார். இதுகுறித்து சிறுமியின் தாய் கேட்டபோது அங்கன்வாடி மையத்தில் இருந்த தாத்தா தனது உடல் முழுவதும் கடித்து வைத்ததாக கூறியுள்ளார். மறுநாள் காலை சிறுமியின் தாய் அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் ஆசிரியரிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
உடனே சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் உதவியாளர் சரஸ்வதியை(50) பார்க்க வந்த தேவராஜ்(60) என்பவர் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது உறுதியானது. இதனால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பார்வதி, தேவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.