தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.