பாஜக உளவியல் போரில் ஈடுபட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலை விட பாஜகவால் கூடுதலாக 10-20 தொகுதிகளில் வெல்ல முடியும். ஆனால் 370 இடங்களில் பாஜக மட்டும் வெற்றி பெறும் என கூறுவது, ஒரு உளவியல் போர் ஆகும். இதனால் பொதுமக்களின் கண்ணோட்டத்தை, பாஜக ஜெயிக்குமா, தோற்குமா என்பதிலிருந்து, 370ஐ கைப்பற்றுமா, இல்லையா என்பதற்கு மாற்றிவிட்டது” என்றார்.