37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக வலம் வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பர் ஒன் வீரராக உள்ளார். அஜர்பைசானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை சதுரங்க போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 17 வயதான குகேஷ் உள்ளூர் வீரர் இஸ்கந்தராவை வென்றுள்ளார். இதன் மூலம் குகேஷ் உலக தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தைபிடித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்த விஸ்வநாதன் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக  இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.