ஒரிசாவில் அரியவகை புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சிமிலிபல் புலிகள் பாதுகாப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் அரிய வகை புலிகள் தென்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி கூறியுள்ளார்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வனத்துறையின் ஈடுபாடான உழைப்பே  இதற்கு காரணம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.