பீஹார் மாநிலம் ரக்சவுல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. ரக்சவுல்–சமஸ்திபூர் பயணிகள் ரயில் சுமார் 35 நிமிடங்கள் செல்ல நாய் காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் பெட்டியில் ஒரு பயணி தனது நாயை சங்கிலியால் இருக்கையில் கட்டியதால், அது ஆக்கிரமித்துக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தியது. பயணிகள் பீதியடைந்து கீழிறங்கியதோடு, ஒருவரை நாய் கடித்து காயப்படுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நாய் இருந்த பெட்டி காலி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டு தர்பங்காவுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அந்த நாய் விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு காலை 8 மணியளவில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் ரயில்வே விதிகள் மீறப்பட்டனவா என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
रक्सौल स्टेशन पर शनिवार सुबह एक अजीबोगरीब घटना देखने को मिली. यात्रियों ने देखा कि ट्रेन की एक बॉगी में एक पालतू कुत्ता बंधा हुआ है. बताया जाता है कि एक व्यक्ति कुत्ते को ट्रेन की सीट से बांधकर वहीं छोड़ चला गया. #DogLovers #IndianRailways #IndianRailway #TheNewspaperDigital pic.twitter.com/6UHgam04HD
— The Newspaper Digital (@TheNewspaperD) August 18, 2025
“>
சமஸ்திபூர் பிரிவு டிஆர்எம் ஜோதி பிரகாஷ் தெரிவித்துள்ளார்: “ரயில்களில் விலங்குகளை ஏற்றிச் செல்வதற்கான இந்திய ரயில்வே விதிகள் தெளிவாக உள்ளன. ஆனால் இங்கு அவை பின்பற்றப்படாததால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பயணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது, தற்போது அவர் நலமாக உள்ளார்” என்றார். இந்த சம்பவம், பயணிகள் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
