அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன் கோட்டை நடுத்தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமாரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது.

இதனால் மயங்கி விழுந்த ராதாகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.