மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்தை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மலை பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இரு சக்கர வாகனங்களில் வால்பாறைக்கு வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்