சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வடக்கு மாவட்ட வீதி செட்டி தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகைக்கு குடியிருக்கும் பழமையான வீட்டில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென நிர்மலா தங்கி இருந்த வீட்டு மாடியில் உள்ள பால்கனி சுற்றுச்சுவர் இடிந்து வெங்கடேசன் என்பவரத்து ஓட்டு வீட்டில் விழுந்தது.

மேலும் விளையாடிக் கொண்டிருந்த நிர்மலாவின் பேரன் 3 வயது நவீன் கிஷோர் தலையில் பால்கனி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சிதறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நவீன் கிஷோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.