சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குகை பகுதியில் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பாபு, விவேகானந்த, மோகன் ஆகிய மூன்று பேரும் கடந்த 2016-ஆம் ஆண்டு சீனிவாசனிடம் ஜவுளி வாங்கியுள்ளனர்.

அதற்கான 14 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை 3 பேரும் சீனிவாசனுக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக சீனிவாசன் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விவேகானந்த், மோகன், பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.