சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாகரன் கடையிலிருந்து 1 கோடி ரூபாய்க்கும் மேல் கருணாகரன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்டபோது கருணாகரன் ரகுமானுக்கு கொலை மேட்டால் விடுத்துள்ளார். இதுகுறித்து ரகுமான் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கருணாகரன் மோசடி செய்த பணத்தை தனது மனைவி பவித்ராவின் வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.