தென் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தெலங்கானாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

கடலோர மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு கர்நாடக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.