தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..

விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் நாட்களில் நாசிக், அவுரங்காபாத், மத்திய பிரதேசத்தில் இருந்து கூடுதல் தக்காளி அனுப்பப்பட உள்ளது. கூடுதல் தக்காளிகள் அனுப்பப்பட இருப்பதால் கூடிய விரைவில் விலை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.