தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பிப்ரவரி 7ஆம் தேதி 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதி வாய்ந்த மாணவிகள் கல்லூரிகள் மூலமாக ஆதார் எண், வங்கி கணக்கு எண், பள்ளி சேர்க்கை எண், கல்வி நிலை சேர்க்கை தேதி, கல்வியாண்டு உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது