ஈரான் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராக்கெட் மூலமாக விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோளானது புவிசார் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குறித்த பயன்பாட்டுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.