மெக்சிகோவிலிருந்து புறப்படவேண்டிய விமானம் ஒன்று சுமார் 4 மணி நேரம் தாமதமாதாகியுள்ளது. இந்நிலையில் பயணிகளை விமானத்தில் காற்று குறைவான நிலையில் விமான ஊழியர்கள் அமரவைத்துள்ளனர். இதனால் வெக்கையாக உணர்ந்த பயணிகளில் ஒருவர், நின்றுகொண்டிருந்த விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்துள்ளார்.

அதன்பின்னர் இறக்கையின் மீது சிறிது தூரம் நடந்து சென்று திரும்பியுள்ளார். அவரை சக பயணிகள் உற்சாகமூட்டியுள்ளனர். இதைக்கண்ட விமான ஊழியர்கள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்றினர்.