தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் நவம்பர் 1 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் புயல் பாதிப்பு காரணமாக டிசம்பர் 13 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.