தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். மெகா ஸ்டாரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது ஒரு முன்னணி ஹீரோவாக ராம்சரண் உயர்ந்துள்ளார். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசானவுடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் உபாசனா பட்டு சேலை அணிந்து கலந்து கொண்டார். இந்நிலையில் ராம் சரணின் மனைவி உபாசானாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் துணை நிறுவனரும், சேர்மனுமான டாக்டர் சி. பிரதாப் ரெட்டியின் பேத்தி தான் உபாசானா கமினேனி. கடந்த 2014-ஆம் ஆண்டு ராம்சரண் மற்றும் உபாசானாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது உபாசானா கர்ப்பமாக இருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனைகளில் உபசானா செய்து வரும் வேலைக்கு நடிகர் ராம்சரண் உறுதுணையாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ராம்சரணின் குடும்ப சொத்து மதிப்பு போக அவரின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 2500 கோடி. மேலும் வெற்றிகரமான தொழிலதிபராக உபாசனா வலம் வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 2500 கோடி என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.