மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சத்ரபதி சிவாஜி மாநகராட்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நோயாளிகள் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனவும், 10 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில், நான்கு பேர் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த  சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைக்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.