தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு வர கூடுதலாக 900 பேருந்துகளும், கோவை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மேலும் மொத்தமாக வார இறுதி நாட்களில் பள்ளி திறப்பை முன்னிட்டு 2300 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட இருக்கிறது.