தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பத்துடன் தேர்வாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்று மற்றும் உரிய ஆவணங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் இதற்கான போட்டி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வில் நான் ஒரு இடங்களை மட்டுமே காலியாக வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதி வாரியத்திற்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.