தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டியை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பண்டிகையையொட்டி துணிக்கடை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக இரவில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கடையை திறந்து வைக்க கடை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.