காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் வரவழைத்து இரண்டு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுக எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more