கேரள மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன்(28) இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். அதோ IPLல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து உள்ளார். IPL 2023 மார்ச் மாதம் 31ம் தேதி துவங்குகிறது. இதனால் சாம்சன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அழைப்பின் பேரில் சாம்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அதன்பின் சாம்சன் தன் டுவிட்டர் பக்கத்தில் “7 வயதிலிருந்தே நான் ரஜினியின் ரசிகர். அப்போது இருந்தே என் பெற்றோரிடம் கூறி வந்தேன் கண்டிப்பாக ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தற்போது தலைவர் ரஜினி என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் வாயிலாக 21 வருடங்களுக்கு பின் எனது கனவு நனவானது” என குறிப்பிட்டுள்ளார்.