தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும், அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை விட 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கித்தான் நாங்கள் பயணித்து வருகிறோம். 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.