தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணிக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளிலும் டாஸ்மாக்கிலும் மாற்ற வாய்ப்பிருப்பதாக அந்த கடிதத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லும் என்றும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தற்போது அண்ணாமலை இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.