தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்த அல்லு அர்ஜுன் கடந்த வருடம் சுகுமார்  இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆகியுள்ளது. இதை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் திரையுலகில் அறிமுகமாக 20 வருடங்கள் நிறைவடைந்ததை மகிழ்ச்சியோடு வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் நீங்கள் காட்டிய அன்பினால் நான் உண்மையாகவே ஆசீர்வதிக்கப் பட்டவன். நான் யார் என்பதை நீங்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் தெரிந்து கொண்டேன். நான் தற்போது திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)