தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தா தங்களுடைய திருமண போட்டோ மற்றும் நாக சைதன்யாவின் போட்டோ போன்றவற்றை வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்ட போதிலும் நாக சைதன்யா இதுவரை சமந்தாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நீக்கவில்லை. விவாகரத்துக்கு பிறகும் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் என நாக சைதன்யா கூறினார்.

விவாகரத்து பெற்றாலும் நாக சைதன்யா சமந்தாவை எந்த இடத்திலும் குறைத்து பேசியதே கிடையாது. இதனால் நாக சைதன்யா மீது ரசிகர்களுக்கு தனி மரியாதை இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒன்றாக வசித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா வீட்டை சமந்தாவுக்கு கொடுத்து விட்டார். இதனால் ஹோட்டலில் வசித்து வந்த நாக சைதன்யா தற்போது ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் சமந்தா குடியிருக்கும் வீட்டிற்கு அருகே 15 கோடி மதிப்பில் புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா மீண்டும் சேர்ந்து விடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியது. ஆனால் இருவரும் காதலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் தற்போது நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியாவது நாக சைதன்யா சமந்தாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.