தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டைட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறது. சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் ராஜாவுக்கு இடையே சில பிரச்சனைகள் இருந்ததாகவும் தற்போது தான் அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் பல வெற்றி படங்களை தயாரித்த ஞானவேல் ராஜா ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களை தயாரித்ததால் சூர்யா ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிப்பதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் கடந்த சில வருடங்களாகவே ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்காமல் இருந்து சூர்யா தற்போது சூர்யா 42 படத்திற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் சரியானதால் தற்போது மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.