கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் சாகுபடி செய்யப்படும் சாமந்திப்பூக்கள் சரக்கு வாகன மூலம் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் சாமந்தி பூ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் கெலமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலகோய்சுந்தரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் எதிரே வந்த வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது. மேலும்  விபத்தில் சிக்கி 2  வாகன டிரைவர்களும் காயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.