2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கும், இளவரசர் உதயநிதிக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன், எதுவும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு ஆடாதீர்கள்.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இப்போது அழைப்பாணை வழங்கும் காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது? காவல்துறை என்ன இப்போதுதான் உருவாக்கப்பட்டதா? நான் ஜனநாயகவாதியாக இருப்பதுதான் இப்போது இவர்களுக்கு பிரச்சனை என நினைக்கிறேன். நானே ஒரு பெரிய ரவுடிதான். இவ்வாறு அவர் விமர்சித்தார்.